search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை
    X

    இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை

    • மதுரையில் இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்த ஐ.டி. ஊழியர் கைது செய்யப்பட்டார்.
    • பாதிக்கப்பட்ட பெண் விவரங்களை ஆதாரப்பூர்வமாக தெரிவித்தார்.

    மதுரை

    மதுரை சம்மட்டி புரத்தைச் சேர்ந்த 25 வயது பெண் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    நான் தனியார் நிறுவ னத்தில் வேலை பார்த்து வருகிறேன். எனக்கும் திருநகர் மங்கம்மாள் சாலையைச் சேர்ந்த செல்வம் மகன் ஆனந்துக்கும் (24) செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

    இவர் மதுரை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். நான் அவருடன் நண்பர் என்ற முறையில் பழகினேன். ஆனந்த் என்னிடம் காதலை தெரிவித்தார். நான் அவரை ஒதுக்கினேன். செல்போனில் பேசுவதை நிறுத்தினேன்.

    இதனால் ஆனந்துக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அவர் என்னுடன் அடிக்கடி தகராறு செய்தார். இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தேன். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    சம்பவத்தன்று இரவு நான் வீட்டில் இருந்தபோது அங்கு வந்த ஆனந்த், என்னை தாக்கியதுடன் அவதூறாக பேசிவிட்டு தப்பினார். இதுகுறித்து போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    எஸ்.எஸ்.காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் மேற்கண்ட விவரங்களை ஆதாரப்பூர்வமாக தெரிவித்தார். இதன் அடிப்படையில் ஆனந்த்திடம் விசாரிக்கப்பட்டது.

    இதில் அவர் அந்த பெண்ணை தாக்கி அவதூறாக பேசியது தெரியவந்தது. இதையடுத்து ஐ.டி. ஊழியர் ஆனந்த்தை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×