search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமறைநாதர்-வேதநாயகி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் சப்பரத்தில் புறப்பாடு
    X

    திருமறைநாதர்-வேதநாயகி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் சப்பரத்தில் புறப்பாடு

    • திருமறைநாதர்-வேதநாயகி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் சப்பரத்தில் புறப்பாடு நடந்தது.
    • ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூ ரில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட திருமறை நாதர்-வேதநாயகி அம்பாள் கோவில் உள்ளது. இங்கு வைகாசி மாதம் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    இைதத்தொடர்ந்து முக்கிய நிகழ்வாக மாங்கொட்டை திருவிழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலை 6 மணிக்கு திருவாத வூர் கோவிலில் இருந்து விநாயகர், முருகன், சண்டி கேஸ்வரர், திருமறைநாதரு டன் பிரியாவிடை, வேத நாயகி அம்பாள் ஆகிய பஞ்ச மூர்த்திகள் சப்பரத்தில் புறப்பட்டு வந்தனர்.

    திருவாதவூர், கொட்டகுடி விலக்கு, ஆண்டிபட்டி, பதினெட்டாங்குடி, மில் கேட், தெற்குப்பட்டி வழி யாக மேலூர் நகர் பகுதியில் முழுவதும் சுற்றி வந்து இன்று மாலை மேலூர் சிவன் கோவிலை சென்றடைகிறது.

    வரும் வழிதோறும் பல மண்டகப்படிகளில் பஞ்ச மூர்த்தி சுவாமிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனைகள் செய்யப்படுகிறது. மீண்டும் நாளை காலை மேலூரில் இருந்து புறப்பட்டு திருவாத வூர் கோவிலை திரும்பச் சென்றடைகிறது.

    வருகிற 31-ந் தேதி சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடை பெறுகிறது. ஜூன் 1-ந் தேதி காலையில் தேரோட்டம் நடைபெறு கிறது இதில் ஆயிரக்க ணக்கான கிராம மக்கள் பங்கேற்று தேர் வடம் பிடித்து இழுப்பார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

    Next Story
    ×