search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரட்டை ரெயில்பாதை பணி: மின்கம்பங்களை மாற்றியமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்
    X

    மின்கம்பங்களை மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மின்வாரிய ஊழியர்கள்.

    இரட்டை ரெயில்பாதை பணி: மின்கம்பங்களை மாற்றியமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்

    • இரட்டை ரெயில்பாதை பணிக்காக மின்கம்பங்களை மாற்றியமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
    • மதுரையிலிருந்து தூத்துக்குடி மற்றும் நாகர்கோவில் வரையில் இரண்டாவது அகல ெரயில்பாதை பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளன.

    திருமங்கலம்

    மதுரையிலிருந்து தூத்துக்குடி மற்றும் நாகர்கோவில் வரையில் இரண்டாவது அகல ெரயில்பாதை பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளன.

    இந்த பணிகள் திருமங்கலம் வரையில் நிறைவடைந்துள்ளதை தொடர்ந்து தற்போது திருமங்கலம்-மதுரை இடையே பணிகள் நடைபெற்று வருகின்றது.

    இதன் ஒருபகுதியாக திருமங்கலம் அருகே கப்பலூர் சிட்கோ பகுதியில் 2-வது தண்டவாளம் அமைந்துள்ள பகுதியில் உள்ள ஏராளமான மின்கம்பங்களை மாற்றி அமைக்கும்படி ெரயில்வே நிர்வாகம் பரிந்துரை செய்தது.

    இதனை தொடர்ந்து சிட்கோ பகுதியில் 2-வது அகல ெரயில் பாதையையொட்டியுள்ள மின்கம்பங்கள் மின்சார வயர்களை எதிர்ப்புறம் இடம்மாற்றம் செய்யும் பணிகளில் மின்வாரியம் ஈடு பட்டுள்ளது.

    இந்த பகுதியில் 2-து அகல ெரயில் பாதையையொட்டி இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் மற்றும் 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் அனைத்தும் மாற்றும் பணியில் மின்வாரிய ஊழியர்கள தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து மின்வாரிய அதிகாரிக்ள கூறுகையில் 2-வது அகல ெரயில்பாதையும் மின்சார ெரயில் செல்வதற்கு தகுந்தாற் போல் மின்கம்பிவயருடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தண்டவாளத்தின் அருகே சிட்கோ தொழிற்சாலைகளுக்கான மின்சார டிரான்ஸ்பார்மரும், மின்சார கம்பங்களும் இருந்தன.

    உயர் மின்அழுத்தம் உள்ள ெரயில்வே மின்பாதையின் அருகே மின்சார வயர்கள் மின்கம்ப ங்கள் இருக்கக்கூடாது என்பதால் சாலையின் எதிர்ப்புறம் அவற்றை மாற்றும்

    Next Story
    ×