என் மலர்
உள்ளூர் செய்திகள்

இலவச மருத்துவ முகாம்
- சோழவந்தானில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
- வரும்முன் காப்போம் திட்டத்தின்கீழ் சோழவந்தான் காமராஜர் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.
சோழவந்தான்
தமிழக அரசின் வரும்முன் காப்போம் திட்டத்தின்கீழ் சோழவந்தான் காமராஜர் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.
பேரூராட்சி தலைவர் ஜெயராமன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். கச்சகட்டி வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார் தலைமையில் கர்ப்பிணிபெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சையளித்து மருந்து, மாத்திரைகள் வழங்கினர்.
இதில் செயல் அலுவலர் சுதர்சன், துப்புரவு ஆய்வாளர் முருகானந்தம், துணைதலைவர் லதாகண்ணன், கவுன்சிலர் கொத்தாளம் செந்தில், வட்டார மேற்பார்வையாளர் முனியசாமி, சுகாதார ஆய்வாளர்கள் கிருஷ்ணன், பிரபாகரன், செல்வம், செந்தில் மற்றும் கிராம செவிலியர்கள், அங்கன் வாடி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
Next Story






