என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அட்டை - கலெக்டர் அறிவிப்பு
- மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அட்டை வழங்கப்படும்.
- இந்த தகவலை மதுரை கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
மதுரை
மதுரை மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரப்படுகிறது. எனவே வேலை அட்டை கோரும் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் நீலநிற அட்டை வழங்கப்படுகிறது. அதுவும் தவிர மாற்றுத் திறனாளிகளுக்கு மாதந்தோறும் 2-வது செவ்வாய் கிழமை வட்டார வளர்ச்சி அலுவலர் அளவிலும், 2 மாதங்களுக்கு ஒரு முறை 2-வது செவ்வாய் கிழமையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் முன்னிலையிலும் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக வருகிற 10-ம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மாற்றுதிறனாளிகளுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. எனவே அந்தந்த பகுதிகளில் வசிக்கும் பயனாளிகள், ஊராட்சி மன்ற அலுவலகத்தை அணுகி, நீல நிற வேலை அட்டை பெற்று பயன் அடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்