search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கப்பலூர் டோல்கேட் எதிர்ப்பு குழுவினர் முதல்-அமைச்சரை சந்தித்து மனு
    X

    கப்பலூர் டோல்கேட் எதிர்ப்பு குழுவினர் முதல்-அமைச்சரை சந்தித்து மனு

    • கப்பலூர் டோல்கேட் எதிர்ப்பு குழுவினர் முதல்-அமைச்சரை சந்தித்து மனு அளித்தனர்.
    • இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    திருமங்கலம்

    மதுரை அருகே உள்ள கப்பலூரில் டோல்கேட் விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ளது. இதை அகற்ற வலியுறுத்தி டோல்கேட் எதிா்ப்பு ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு அவர்கள் தலைமையில் போராட் டங்கள் நடந்து வருகிறது.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மாதம் 22-ந் தேதி திருமங்கலம் நகர் முழுவதும் கடைய டைப்பு போராட்டம் நடந்தது. மதுரை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கப்பலூர் டோல்கேட் எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழுவினர் கப்பலூர் டோல்கேட் அகற்ற வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

    இதுகுறித்து கப்பலூர் டோல்கேட் எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த தலைவர் ஜெயராமன் கூறியதாவது:-

    மனுவை பெற்று கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பாராளுமன்றத்தில் கப்பலூர் டோல்கேட் பிரச்சினை குறித்து மாணிக்கம்தாகூர் எம்.பி. பேசியுள்ளார். மத்திய மந்திரி நிதின்கட்கரியை டெல்லியில் சந்திக்க எம்.பி. ஏற்பாடு செய்துள்ளார்.

    சமீபகாலமாக கப்பலூர் டோல்கேட் நிர்வாகம் சார்பில் அவர்களது எல்லை தொடக்கம் முதல் முடிவு வரையில் நான்கு வழிச்சாலையில் கடை அல்லது வீடு கட்டினால் ரவுடிகளை வைத்து மிரட்டி பணம் கேட்பதாக பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது டோல்கேட் ஒருங்கி ணைப்பு குழுவை சேர்ந்த வழக்கறிஞர் கனகராஜ், அனிதாபால்ராஜ், கண்ணன், செல்வம், ஆனந்தன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×