search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மருத்துவ முகாம்
    X

    மருத்துவ முகாம்

    • சோழவந்தான் அருகே மருத்துவ முகாம் நடந்தது.
    • இந்த முகாமில் 900-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற்றனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன்காப்போம் அரசு சிறப்பு பொதுமருத்துவ முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார் தலைமைதாங்கினார்.

    வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முனியசாமி முன்னிலை வகித்தார். சுகாதாரஆய்வாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். மருத்துவர்கள் அருண்கோபி, ஹரிபிரசாத், கிஷாமகேஷ், செல்வி உள்பட 8 டாக்டர்கள் நோயாளிகளை பரிசோதனை செய்து மருந்து, மாத்திரை வழங்கினர்.

    கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது. முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல், துணைத்தலைவர் ராஜா, ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகா ஞானசேகரன், சுகாதாரஆய்வாளர்கள் கிருஷ்ணன், ராமகிருஷ்ணன், பிரபாகரன், இனியகுமார், சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கண்ணன் நன்றி கூறினார். இந்த முகாமில் 900-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற்றனர்.

    Next Story
    ×