என் மலர்
உள்ளூர் செய்திகள்

கந்துவட்டி வழக்கில் ஒருவர் கைது
- கந்துவட்டி வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
- ஆத்திரம் அடைந்த ஆறுமுகம், பூரணம் என்பவருடன் சேர்ந்து செல்வியின் வீட்டுக்கு வந்து அவரை அடிக்க பாய்ந்தார்.
மதுரை
மதுரை காமராஜர்புரம், கக்கன் தெருவைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மனைவி செல்வி (45). இவர் அதே பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் (58) என்பவரிடம் ரூ.1.85 லட்சம் கடன் வாங்கினார். இதற்காக அவர் மாதம்தோறும் ரூ.12 ஆயிரம் செலுத்தி வந்தார்.
2 மாதங்களாக செல்வி வட்டி செலுத்தவில்லை. ஆத்திரம் அடைந்த ஆறுமுகம், பூரணம் என்பவருடன் சேர்ந்து செல்வியின் வீட்டுக்கு வந்து அவரை அடிக்க பாய்ந்தார்.
இதுகுறித்து செல்வி கீரைத்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






