search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை மறியல்
    X

    சாலை மறியல்

    • அலங்காநல்லூர் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • கிராமத்திற்கு பாதை ஒதுக்கி நடந்து செல்ல ஏற்பாடு செய்யப்படும்

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் அருகே உள்ள கல்லணை ஊராட்சிக்கு உட்பட்ட காந்தி கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்கு செல்ல பாதை வசதி வேண்டி பொதுமக்கள் அலங்காநல்லூர்-தனிச்சியம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் சேது சீனிவாசன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் சுப்பராயலு, சப்-இன்ஸ்பெக்டர்கள் அசோக்குமார், திருவள்ளுவர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கிராமத்திற்கு பாதை ஒதுக்கி நடந்து செல்ல ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    Next Story
    ×