என் மலர்
உள்ளூர் செய்திகள்

மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி
- மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
- ஜெயராஜ், அய்யனார், ராமகிருஷ்ணன், பாலமுருகன் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.
சோழவந்தான்
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
7-ம் நாள் மண்டகப்படியாக சோழவந்தான் விஸ்வகர்மா ஐந்திணை தொழிலாளர்கள் சார்பில் அக்கசாலை விநாயகர் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்ட நீதிபதி சுந்தர்ராஜ், சோழவந்தான் காவல் ஆய்வாளர் சிவபாலன், பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், தி.மு.க. பேரூர் செயலாளரும், 9-வது வார்டு கவுன்சிலருமான வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் ஆகியோர் மரக்கன்றுகளை வழங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தனர்.
ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள் கண்ணன், மணி, அங்குசாமி, நாகு ஆசாரி, பிச்சைமணி, முருகன், ஜெயராஜ், அய்யனார், ராமகிருஷ்ணன், பாலமுருகன் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.
Next Story






