search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
    X

    மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

    • மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற சிறப்பு முகாம் வருகிற 1,2 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
    • இந்த தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாற்றுத்திறனா ளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறுவதில் உள்ள சிரமங்களை மாற்றுத்திற னாளிகள் தவிர்க்கும் வகையில் கூடுதலாக வட்டார அளவில் அரசு மருத்துவ மனைகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.

    ஒவ்வொரு மாதமும் வரும் முதல் செவ்வாய்க்கிழமைகளில் காலை 10 மணி முதல் அரசு மருத்துவமனை திருமங்க லத்திலும், ஒவ்வொரு மாதமும் வரும் முதல் புதன்கிழமைகளில் காலை 10 மணி முதல் அரசு மருத்துவமனை மேலூரிலும் இணை இயக்குநர், நலப் பணிகள் இணை இயக்குநர் அலுவலகம், மதுரை (இ) உசிலம்பட்டி கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் குழு மூலம் நடைபெற்று வருகிறது.

    நவம்பர் மாதத்தில் 1-ந் தேதி (செவ்வாய்) அன்று அரசு மருத்துவமனை திருமங்கலத்திலும், 2-ந் தேதி (புதன்) அன்று அரசு மருத்துவமனை மேலூரிலும் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களில் இதுவரை மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டையை புதுப்பிக்க வேண்டிய மாற்றுத்திறனாளிகள், மாவட்ட மாறுதலில் மதுரை மாவட்டத்திற்கு குடிபெயர்ந்து வரும் மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளி களுக்கான தனித்துவ அட்டை பெறாத மாற்றுத்தி றனாளிகள், தங்களது குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-5 ஆகிய வற்றுடன் மேற்குறிப்பிட்ட தினங்களில் திருமங்கலம் மற்றும் மேலூர் அரசு மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று மாற்றுத்தி றனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்று பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×