search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருநங்கை  தூக்குப்போட்டு தற்கொலை
    X

    திருநங்கை தூக்குப்போட்டு தற்கொலை

    • மேலூர் அருகே திருநங்கை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அ.வல்லாளபட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் என்ற பூமிகா (வயது27). திருநங்கையான சம்பவத் தன்று அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரின் வீட்டில் தங்கி உள்ளார். அப்போது பூமிகா அங்குள்ள தனியறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மேலூர் சப்- இன்ஸ்பெக்டர் மணிமாறன், தனிப்பிரிவு ஏட்டு தினேஷ் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி மேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் பூமிகா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×