search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கோவயைில் டாஸ்மாக் பார் அருகே வாலிபரை குத்திக் கொன்ற நபர் கைது
    X

    கோவயைில் டாஸ்மாக் பார் அருகே வாலிபரை குத்திக் கொன்ற நபர் கைது

    • படுகாயம் அடைந்த ரகுமத்துல்லா சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • கரூரில் பதுங்கி இருந்த சந்தோசை போலீசார் கைது செய்தனர்.

    கோவை,

    கோவை குனியமுத்தூர் பாரதிநகரை சேர்ந்தவர் ரகுமத்துல்லா (வயது 29). பெயிண்டர்.

    இவரது மனைவி தஸ்லிமா. இந்த தம்பதியினருக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.

    ரகுமத்துல்லா மீது வழிப்பறி, செல்போன் திருட்டு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. நேற்று இரவு ரகுமத்துல்லா செல்வபுரம் பேரூர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாருக்கு தனது நண்பர் மணிகண்டன்(23) என்பவருடன் சென்று மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அவர்களது அருகே செல்வபுரம் பகுதியை சேர்ந்த சந்தோஷ்(26) என்பவர் தனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தோஷின் நண்பர் ஒருவரது செல்போன் காணாமல் போனது. இந்த செல்போனை ரகுமத்துல்லா எடுத்திருக்கலாம் என்று சந்தோஷ் அவரிடம் கேட்டு வாக்குவாதம் செய்தார். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    பின்னர் பாரில் இருந்து வெளியே வந்த ரகுமத்துல்லாவை ஆத்திரம் அடைந்த சந்தோஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வயிற்றில் குத்தினார். தடுக்க முயன்ற மணிகண்டனுக்கும் கத்திக்குத்து விழுந்தது. கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த ரகுமத்துல்லா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    பின்னர் அங்கிருந்து சந்தோஷ் தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்து வந்த செல்வபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். காயம் அடைந்த மணிகண்டன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து செல்வபுரம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து சந்தோசை தேடி வந்தனர். கரூரில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×