search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண்டபம்-சென்னை: 604 கி.மீ. கடலில் நீந்தி சிறப்பு குழந்தைகள் கின்னஸ் சாதனை படைக்க ஆர்வம்
    X

    மண்டபம்-சென்னை: 604 கி.மீ. கடலில் நீந்தி சிறப்பு குழந்தைகள் கின்னஸ் சாதனை படைக்க ஆர்வம்

    • 15-ந்தேதி சென்னையில் நிறைவு செய்ய உள்ளனர்.
    • சிறப்பு குழந்தைகள் கின்னஸ் சாதனை படைக்க ஆர்வம்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடற்கரையில் இருந்து எஸ்.டி.ஏ.டி. அமைப்பின் சார்பில் 15 சிறப்பு குழந்தைகள் கின்னஸ் உலக சாதனைக்காக சென்னை மெரினா கடற்கரை வரை 604 கி.மீ நீந்தி செல்கின்றனர்.

    இன்று (5-ந்தேதி) தொடங்கி நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் (காலை 6 மணி முதல் மாலை 6 வரை) நீந்தி ஆகஸ்ட் 15-ந்தேதி சென்னையில் நிறைவு செய்ய உள்ளனர்.

    இன்று காலை இதற்கான தொடக்க விழா மண்டபத்தில் நடந்தது. மண்டபம் பேரூராட்சி சேர்மன் ராஜா குடியரசைக்கு தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து 15 சிறப்பு குழந்தைகளும் கடலில் இறங்கி நீந்த தொடங்கினர்.

    இந்த நிகழ்வில் தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் சிராஜுதீன், குழந்தைகளின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு மீனவர் சங்க தலைவர் அன்பழகனார் கூறுகையில், கின்னஸ் சாதனைக்காக 15 சிறப்பு குழந்தைகள் இதில் பங்கேற்கின்றனர். அவர்கள் ஏற்கனவே இந்தியாவின் பல மாநிலங்களில் நீந்தி சாதனை படைத்துள்ளனர்.

    கடலில் நீந்தும் குழந்தைகளுக்காக 5 படகுகள் பாதுகாப்பாக செல்லும். அவர்களுடன் 8 பயிற்சியாளர்கள் செல்வார்கள். 11 நாட்கள் கடலில் நீந்தும் குழந்தைகள் வருகிற 15-ந்தேதி சென்னையில் நிறைவு செய்வார்கள் என்று கூறினார்.

    Next Story
    ×