என் மலர்
உள்ளூர் செய்திகள்

வளர்ச்சிப்பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு- மழை காலத்திற்கு முன் பணிகளை முடிக்க உத்தரவு
- பணிகளை மழைகாலத்திற்குள் முடிக்க வேண்டும் என்று மேயர் ஜெகன்பெரியசாமி உத்தர விட்டுள்ளார்.
- சாலைகளில் மணல் திட்டுகள் அகற்றும் பணியினை ஊழியர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி யில் உள்ள 60 வார்டு பகுதிகளில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகளை மழைகாலத்திற்குள் முடிக்க வேண்டும் என்று மேயர் ஜெகன்பெரியசாமி உத்தர விட்டுள்ளார்.
புதிய போக்குவரத்து சாலை களையும் மாநகராட்சி நிர்வாகம் உருவாக்கி யுள்ளது. குறுகலான சாலைகள் பல பகுதிகளில் விரிவான சாலைகளாக மாறியுள்ளது.
சாலைகளில் தேவையற்ற மணல் திட்டுகள், முட் புதர்கள், செடிகள், குப்பைகள் ஆகியவற்றை அகற்றி அதிகாரிகள் கண் காணிப்பில் ஊழியர்கள் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.இந்த பணி களை மேயர் ஜெகன் பெரியசாமி நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார்.
இந்நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட சண்முக புரம் செல்லும் சாலையில் தற்போது நடைபெற்று வரும் மணல் திட்டுகள் அகற்றும் பணிகளையும், கடற்கரை சாலையில் நடைபெறும் வடிகால் கட்டுமான பணிகளையும் நேற்று இரவு ஆய்வு மேற்கொண்டார். அப்போது தரமான முறை யில் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.ஆய்வின் போது மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.






