என் மலர்
உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாமை நகர்மன்ற தலைவர் புகழேந்தி தொடக்கி வைத்தார்.
பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்
- நகர்மன்ற தலைவர் புகழேந்தி தலைமை வகித்து முகாமை தொடக்கி வைத்தார்.
- சக்கரை நோய் மற்றும் பொதுமருத்துவ பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கினார்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் நகராட்சி சார்பில் பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது. முகாமை நகர்மன்ற தலைவர் புகழேந்தி தலைமை வகித்து தொடக்கி வைத்தார். மருத்துவர் ராஜசேகர் தலைமையில் மருத்துவ குழுவினர், நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு இரத்த பரிசோதனை, சக்கரை நோய் மற்றும் பொதுமருத்துவ பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராகிம், துணைத்தலைவர் மங்களநாயகி, நகர்மன்ற உறுப்பினர்கள் உமா நடராஜன், மயில்வாகனம், அனிஸ் பாத்திமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story






