என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழா நடக்கும் இடத்தை ஆய்வு செய்த
ஐ.ஜி. அஸ்ரா கார்க, கலெக்டர் ஆகாஷ்.
8-ந்தேதி மு.க.ஸ்டாலின் தென்காசி வருகை-பாதுகாப்பு ஏற்பாடு குறித்து போலீஸ் ஐ.ஜி. ஆய்வு
- தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
- கலெக்டர் ஆகாஷ் மேற்பார்வையில் பந்தல் அமைக்கும் பணி உள்ளிட்ட ஏராளமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நெல்லை:
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டங்கள் தோறும் சென்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
நலத்திட்ட உதவிகள்
இந்நிலையில் நாளை மறுநாள்(8-ந்தேதி) தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 1 லட்சம் பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக வருகிறார்
இதற்காக நாளை இரவு சென்னையில் இருந்து பொதிகை விரைவு ரெயிலில் புறப்படும் அவர் நாளை மறுநாள்(வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு தென்காசி வந்தடைகிறார். அங்கிருந்து குற்றாலம் விருந்தினர் மாளிகை சென்றுவிட்டு விழா மேடைக்கு செல்கிறார்.
ஐ.ஜி. ஆய்வு
இதனையொட்டி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் மேற்பார்வையில் பந்தல் அமைக்கும் பணி உள்ளிட்ட ஏராளமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த முன்னேற்பாடுகளை பார்வையிட தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் நேற்று தென்காசி வந்தார்.
தொடர்ந்து முதல்-அமைச்சர் செல்ல உள்ள பாதை வழியாக குற்றாலம் சென்றார். அங்கு அவர் தங்க உள்ள அறையை பார்வையிட்ட தென்மண்டல ஐ.ஜி., தென்காசி அருகே கணக்கப்பிள்ளை வலசையில் விழா நடைபெற உள்ள பள்ளி வளாகத்தை ஆய்வு செய்தார்.
நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார், தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆலோசனை நடத்தினார்.






