search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    7 குழந்தைகளின் தந்தைக்கு நவீன கருத்தடை சிகிச்சை
    X

    மருத்துவ அலுவலர் மருத்துவக் குழுவினருக்கு ஆலோசனை வழங்கிய போது எடுத்த படம்.


    7 குழந்தைகளின் தந்தைக்கு நவீன கருத்தடை சிகிச்சை

    • சக்தி கிருஷ்ணன் 3 மணி நேரம் அறிவுரைகள் கூறி ஆண்கள் கருத்தடை செய்து கொள்வதால் எந்த தொந்தரவும் இருக்காது.
    • 75 பேருக்கு மேல் இதே போன்று செய்துள்ளார்கள் என்று எடுத்துக் கூறினார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அத்தாணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்களுக்கான கருத்தடை முகாம் நடைபெற்றது. இதில் தகுதி வாய்ந்த 9 பேர் கருத்தடை செய்து கொள்ள வந்திருந்தனர்.

    இதில் பர்கூர் மலைப்பகுதி ஓசூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் தாசன், மனிஷா தம்பதியினர். இவர்களுக்கு 4 ஆண் குழந்தைகள் மற்றும் 3 பெண் குழந்தைகள் என மொத்தம் 7 குழந்தைகள் உள்ளனர். மனிஷாவிற்கு இதய பிரச்சனை உள்ளதன் காரணமாக அவருக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாத சூழ்நிலையில் அவரது கணவர் தாசனுக்கு நவீன குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

    வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் 3 மணி நேரம் அறிவுரைகள் கூறி ஆண்கள் கருத்தடை செய்து கொள்வதால் எந்த தொந்தரவும் இருக்காது. மேலும் இதுவரை 75 பேருக்கு மேல் இதே போன்று செய்துள்ளார்கள் என்று எடுத்துக் கூறினார். பல மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு அறிவுரைகளை ஏற்று அந்தியூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்.பிரகாஷ் நவீன வாசக்டமி குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடித்தார்.

    மேலும் ஆபரேஷன் முடிந்தவுடன் தாசன் 108 ஆம்புலன்ஸ் மூலம் சுகாதார ஆய்வாளர் கிருபநாதன் மற்றும் கிராமப்புற செவிலியர்களுடன் சென்று அவரது இல்லத்தில் விட்டு வந்துள்ளனர்.

    Next Story
    ×