search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வண்டலூர் அருகே நகைக்கடை-மருந்து கடையில் கொள்ளை
    X

    வண்டலூர் அருகே நகைக்கடை-மருந்து கடையில் கொள்ளை

    • தினேஷ் கீரப்பாக்கம் மெயின் ரோட்டில் நகைக்கடை வைத்துள்ளார்.
    • கோபிநாத் என்பவரது மருந்து கடையின் பூட்டை உடைத்து ரூ.15 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் சுருட்டி சென்று விட்டனர்.

    வண்டலூர்:

    வண்டலூர் அருகே உள்ள கொளப்பாக்கம் ஊனமாஞ்சேரியை சேர்ந்தவர் தினேஷ். இவர் கீரப்பாக்கம் மெயின் ரோட்டில் நகைக்கடை வைத்துள்ளார். நேற்று இரவு வந்த மர்ம நபர்கள் நகை கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கம், 5 பவுன் நகை, 1 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டனர். தங்க நகை என நினைத்து கவரிங் நகைகளையும் அள்ளி சென்று உள்ளனர்.

    இதேபோல் கீரப்பாக்கம் துலுக்காணத்தம்மன் தெருவை சேர்ந்த கோபிநாத் என்பவரது மருந்து கடையின் பூட்டை உடைத்து ரூ.15 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் சுருட்டி சென்று விட்டனர்.

    Next Story
    ×