search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மோட்டார் சைக்கிள்கள் மோதல்: கணவன்- மனைவி படுகாயம்
    X

    மோட்டார் சைக்கிள்கள் மோதல்: கணவன்- மனைவி படுகாயம்

    • சம்பவத்தன்று அருள் தனது குடும்பத்தினருடன் மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
    • சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்,

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே வளவனூரை சேர்ந்தவர் முருகன் அருள் (வயது 29). அவரது மனைவி வேண்டாமிர்தம்(28) . இவர்களது மகன் வெற்றி(8). சம்பவத்தன்று அருள் தனது குடும்பத்தினருடன் மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அசோகபுரி அருகே சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அருள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது, இதில் தவறி கீழே விழுந்த அருள், அவரது மனைவி வேண்டாமிர்தம், மகன் வெற்றி ஆகியோர் படுகாயம் அடைந்தனர், படுகாயம் அடைந்த 3 பேரையும் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர், இது குறித்து புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×