என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாண்டமங்கலம் பகுதியில் சட்ட விரோதமாக மது, கஞ்சா, லாட்டரி விற்பனை
- பாண்டமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனையால் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் அதிக அளவு கள்ளத்தன மாக மது விற்பனையும், லாட்டரி விற்பனையும் நடக்கிறது.
- பாண்டமங்கலத்தில் கஞ்சா, லாட்டரி, சந்து கடையில் மது விற்பனை நடக்கிறது. 2 நாட்களுக்கு முன்பு சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் கண்டித்து வாட்ஸ் அப்பில் மெசேஜ் போட்டுள்ளேன்.
பரமத்திவேலூர்;
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த பாண்டமங்கலம் பேரூராட்சி தலைவராக தி.மு.க.,வைச் சேர்ந்த சோமசேகர் உள்ளார்.
போலீசில் புகார்
இவர் பாண்டமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனையால் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர். இப்பகுதியில் கள்ளத்தன மாக மது விற்பனையும், லாட்டரி விற்பனையும் நடக்கிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரமத்தி வேலூர் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து பாண்ட மங்கலம் பேரூராட்சி தலைவர் சோமசேகர் கூறியதாவது:-
பாண்டமங்கலத்தில் கஞ்சா, லாட்டரி, சந்து கடையில் மது விற்பனை நடக்கிறது. 2 நாட்களுக்கு முன்பு சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் கண்டித்து வாட்ஸ் அப்பில் மெசேஜ் போட்டுள்ளேன்.
தொடர்ந்து இப்பகுதியில் கஞ்சா, லாட்டரி, சட்டவிரோத மது விற்பனையை அனுமதிக்க முடியாது. கஞ்சா விற்பனையால் இளைஞர்களை வாழ்வு சீரழிகின்றது. பொதுமக்கள் நலன் கருதி சட்ட விரோத செயல்களை தடுக்க பரமத்தி வேலூர் இன்ஸ்பெக்டர் இந்திராணியிடம் புகார் அளித்துள்ளேன். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார் என கூறினார்.
பாண்டமங்கலத்தில் நடக்கும் சட்டவிரோத செயல்களை போலீசார் கண்டு கொள்வதில்லை. மாவட்ட காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.






