search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட விழிப்புணர்வு பிரசாரம்
    X

    கபிலர்மலை வட்டாரத்தில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டம் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தை தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

    ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட விழிப்புணர்வு பிரசாரம்

    • கபிலர்மலை வட்டா ரத்திலுள்ள 30 கிராமங்க ளிலும் விழிப்புணர்வு பிரசாரம் 5 வாகனங்கள் மூலம் நடைபெற்றது.
    • விவசாயி களுக்கு மானியத்தில் விநியோகம் செய்ய தயார் நிலையில் இருப்பது குறித்தும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை வட்டார வேளாண்மை துறை சார்பில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஊட்டமிகு சிறுதானியங்கள் சாகுபடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பொது மக்களிடையே அதன் பயன்பாட்டை ஊக்குவிக்க வும் கபிலர்மலை வட்டா ரத்திலுள்ள 30 கிராமங்க ளிலும் விழிப்புணர்வு பிரசாரம் 5 வாகனங்கள் மூலம் நடைபெற்றது.

    பிரசார வாகனங்கள்

    இந்த நிகழ்ச்சிக்கு கபி லர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராதாமணி தலைமை வகித்தார். பிர சார வாகனங்கள் கபிலர் மலை வட்டார வேளாண் மைத்துறை அட்மா திட்ட தலைவர் சண்முகம் கொடி யசைத்து தொடங்கி வைத்தார். கபிலர்மலை வட்டார வேளாண்மை மற்றும் சார்பு துறைகளின் அனைத்து நிலை அலுவ லர்கள் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    வரகு, தினை, சாமை, குதிரைவாலி, கம்பு, சோளம் மற்றும் ராகி ஆகியவற்றை விவசாயிகள் சாகுபடி செய்ய வலியுறுத்தியும், சிறுதானியங்களில் உள்ள ஊட்டமிகு சத்துக்கள் குறித்த தகவல்களை பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும் வாகனங்களில் பதாகைகள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன. சிறுதானிய சாகுபடிக்கு தேவையான விதைகள், நுண்ணூட்டங்கள், உயிர் உரங்கள் மற்றும் இயற்கை பயிர் பாதுகாப்பு மருந்துகள் வட்டார வேளாண்மை விரி வாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயி களுக்கு மானியத்தில் விநியோகம் செய்ய தயார் நிலையில் இருப்பது குறித்தும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    Next Story
    ×