search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பரமத்தி வேலூர் பகுதிகளில் நவராத்திரி விழா
    X

    பேட்டை புது மாரியம்மன் கோப்பணம் பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன், பேட்டை பகவதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.


    பரமத்தி வேலூர் பகுதிகளில் நவராத்திரி விழா

    • 26-ஆம் தேதி மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், கட்டளை பூஜையும் நடைபெற்றது.
    • கோப்பணம் பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி நான்காம் நாளை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.


    பரமத்திவேலூர்:


    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டை யில் உள்ள புதுமாரியம்மன் கோயிலில் 48-ம் ஆண்டு நவராத்திரி விழா கடந்த 26-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நவராத்திரி விழாவை முன்னிட்டு 26-ஆம் தேதி மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், கட்டளை பூஜையும் நடைபெற்றது. 27-ம் தேதி முதல் வரும் 3-ம் தேதி வரை தினந்தோறும் அம்ம னுக்கு அபிஷேகமும், அலங்கா ரமும், மகா தீபாராதனையும் நடைபெறுகிறது.


    4-ம் தேதி அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவமும், 5-ம் தேதி மாலை அம்மன் கோயில் வளாகத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக அலங்கரிக்க ப்பட்ட வாகனத்தில் புறப்பட்டு ‌‌‌‌சந்தைபேட்டையில் உள்ள பகவதியம்மன் கோயிலுக்கு செல்கிறது. அதனை தொடர்ந்து அம்புசேர்வை நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடு களை வேலூர் பேட்டை‌ புதுமாரியம்மன் கோயில் நவராத்திரி விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


    அதேபோல் கோப்பணம் பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி நான்காம் நாளை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. நவராத்திரி நான்காம் நாளை முன்னிட்டு ப‌ரமத்திவேலூர் சுல்தான் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள அம்மனுக்கு கொலு மேடை அமைத்து சிறப்பு அபிஷேகம் மற்றும் அம்மனுக்கு மகாலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு நவராத்திரி பூஜை நடைபெற்றது.


    ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர். முடிவில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


    Next Story
    ×