search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேப்பனபள்ளி அருகே   வீட்டுக்குள் புகுந்த தேனீக்கள் கூட்டத்தால் பரபரப்பு
    X

    வேப்பனபள்ளி அருகே வீட்டுக்குள் புகுந்த தேனீக்கள் கூட்டத்தால் பரபரப்பு

    • வீட்டிற்குள் தேனீக்கள் கூட்டம் புகுந்துள்ளது.
    • தீயணைப்பு குழுவினர் விரைந்து வந்து வீட்டிற்கு புகுந்த தேனி கூட்டை தண்ணீர் அடித்து கலைத்தனர்.

    வேப்பனப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள சின்னமனவாரணபள்ளி கிராமத்தில் சசிகுமார் என்பவரது வீட்டிற்குள் தேனீக்கள் கூட்டம் புகுந்துள்ளது.

    தேனீக்கள் கூட்டத்தை பார்த்த சசிகுமார் குடும்பத்தினர் அலறிய டித்து வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தனர். பின்னர் கிராம மக்கள் தேனீக்களை விரட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர்.

    ஆனால் தேனீக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் அப்பகுதியில் பொதுமக்களை கொட்ட முயன்றது. இதனால் கிராம மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறினர். பின்னர் அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு மற்றும் மீட்டுக் குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கிருஷ்ணகிரியில் இருந்து மார்ட்டின் தலைமையிலான தீயணைப்பு குழுவினர் விரைந்து வந்து வீட்டிற்கு புகுந்த தேனி கூட்டை தண்ணீர் பீச்சி அடித்து கலைத்தனர்.

    பின்பு அப்பகுதியில் இருந்த தேனீக்களை அகற்றி பையில் போட்டுக்கொண்டு வனப்பகுதியில் கொண்டு சென்று தேனிக்களை பத்திரமாக விட்டனர்.

    வீட்டிற்குள் இருந்த தேனீக்கள் கூட்டை அகற்றியதால் அப்பகுதி பொதுமக்களும் சசிகுமார் குடும்பத்தினரும் நிம்மதி அடைந்தனர். வீட்டுக்குள் தேனிகள் கூட்டம் புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

    Next Story
    ×