search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய அளவிலான ஆக்கி போட்டி-2-வது இடம் பிடித்து நீலகிரி மாணவர்கள் சாதனை
    X

    தேசிய அளவிலான ஆக்கி போட்டி-2-வது இடம் பிடித்து நீலகிரி மாணவர்கள் சாதனை

    • போட்டியில் 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
    • தேசிய அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.

    குன்னூர்,

    டெல்லி ஐ.சி.எஸ்.சி கவுன்சில் சார்பில் தேசிய அளவிலான ஆக்கி போட்டி கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நடைபெற்றது.போட்டியில் 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, உத்திர பிரதேசம், உத்தரகாண்ட், பீகார், பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

    தமிழக அணி சார்பில் 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில் நீலகிரி மாவட்ட குன்னூர் கோழியின சென்ட் பள்ளி மற்றும் பிருந்தாவன் பப்ளிக் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் சிறப்பாக விளையாடி இறுதி போட்டிக்கு தகுதி பெற்று தேசிய அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்தனர். இவர்களை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

    Next Story
    ×