search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயிலில் அடிபட்டு முதியவர் சாவு
    X

    ரெயிலில் அடிபட்டு முதியவர் சாவு

    • முதியவர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

    நீடாமங்கலம்:

    கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம்- திருவிடைமருதூர் இடையே பனந்தோப்பு பகுதியில் செல்லும் ரெயில் தண்டவாளத்தில் நேற்று மதியம் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.

    இதனைப் பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்படி கும்பகோணம் ரெயில்வே போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது பற்றி விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×