search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கம்பியில் மோதி முதியவர் சாவு
    X

    கம்பியில் மோதி முதியவர் சாவு

    • சிவன்கோவில் அருகில் வந்த போது பஸ் டிரைவர் திடீரென பிரேக் போட்டார்.
    • பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே சாலூர் பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடந்தது. இந்த விழாவிற்கு நேற்று ஓசூர் பாரதியார் நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது60), இவரது மனைவி நாகமணி (55) ஆகிய இருவரும் பஸ்சில் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது மத்தூர் அருகே சிவன்கோவில் அருகில் வந்த போது பஸ் டிரைவர் திடீரென பிரேக் போட்டார். இதனால் பஸ்சின் சீட்டில் அமர்ந்து இருந்த கிருஷ்ணமூர்த்தி முன்னால் இருந்த கம்பியின் மீது மோதினார். இதில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து மத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×