search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் ஆட்டோவில் சென்ற முதியவரிடம் செல்போன் பறிப்பு-2 பேர் கைது
    X

    தூத்துக்குடியில் ஆட்டோவில் சென்ற முதியவரிடம் செல்போன் பறிப்பு-2 பேர் கைது

    • ரத்தினம் புதிய பஸ்நிலையத்தில் இருந்து ஆட்டோவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
    • செல்போனை பறித்த அந்தோணி சூர்யா,சக்திகுமாரை போலீசார் கைது செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்து நகரை சேர்ந்தவர் ரத்தினம் (வயது 60). இவர் நேற்றிரவு வெளியூர் சென்று விட்டு புதிய பஸ்நிலையத்தில் இருந்து ஆட்டோவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஆட்டோவை பின்தொடர்ந்து சென்றவர்கள் திடீரென ஆட்டோவை வழிமறித்து ரத்தினத்திடம் இருந்து செல்போனை பறித்து சென்றனர். இதுதொடர்பாக அவர் தாளமுத்து போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி வழக்குப்பதிவு செய்து செல்போனை பறித்து சென்ற தாளமுத்துநகர் பகுதியை சேர்ந்த அந்தோணி சூர்யா (வயது 22) அவரது நண்பர் சக்திகுமார் ஆகியோரை கைது செய்தனர்.

    Next Story
    ×