என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின்சாரம் தாக்கி மூதாட்டி சாவு
- டிரான்ஸ் பார்மர் லைனை தொட்டதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
- காவேரிபட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டினம் அருகே உள்ள பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் வேடியப்பன். இவரது மனைவி துளசியம்மாள் (வயது 65).
இவர் பனந்தேரி பகுதியில் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது டிரான்ஸ் பார்மர் லைனை தொட்டதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து காவேரி பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






