என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பேய்க்குளம் புனித லூக்கா தொழுநோய் மருத்துவமனையில் இயேசு விடுவிக்கிறார் புது வாழ்வு சங்கம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா
- புனித லூக்கா தொழுநோய் மருத்துவ மனையில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.
- விழாவில் கிறிஸ்துமஸ் புத்தாடைகள் மற்றும் விருந்து ஆகியவை வழங்கப்பட்டது.
குரும்பூர்:
நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் புது வாழ்வு சங்கம் சார்பில் பேய்க்குளம் புனித லூக்கா தொழுநோய் மருத்துவ மனையில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், பேய்குளத்தில் உள்ள தூய லூக்கா தொழுநோய் மருத்துவமனையிலுள்ள தொழு நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தி னர்களுக்கு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியமும் அதனுடன் இணைந்த புதுவாழ்வு சங்கமும் இணைந்து கிறிஸ்துமஸ் புத்தாடைகள் மற்றும் விருந்து ஆகியவற்றை வழங்கினர்.
இதில் பன்னீர் செல்வம் குழுவினர் கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடினர். சகோ. சாம்ஜெபராஜ் கிறிஸ்து மஸ் செய்தி வழங்கி சிறப்பு பிரார்த்தனை செய்தார். நிறைவாக தொழுநோயாளிகளுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டு, கிறிஸ்துமஸ் விருந்து பரி மாறப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய பொது மேலாளர் செல்வக்குமார் தலைமையில் சமூக தன்னார்வலர் ஹெய்ன்ஸ், பிசியோதெரபி பாக்கியராஜ் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்