என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
நுகர்வோர் மன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி
- பொருட்கள் வாங்கும்போது தர முத்திரைகளை பார்க்க வேண்டும்
- குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில் விழா
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே பொம்மனப்பாடி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலை பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி உதவி தலைமை ஆசிரியை தமிழரசி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கதிரவன் கலந்துகொண்டு பேசுகையில், நுகர்வோர் பாதுகாப்பு, நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள், பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற செயல்பாடுகள் குறித்து விரிவாக பேசினார். மேலும் ஒவ்வொரு மாணவர்களும் நுகர்வோர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வினை முழுமையாக அடைந்து தனது பெற்றோரிடமும், அருகாமையில் இருப்பவரிடம் இதுபற்றி விளக்கமாக கூற வேண்டும் எனவும், கண்டிப்பாக பொருட்கள் வாங்கும் போது கவனித்து வாங்க வேண்டும், பொருட்கள் வாங்கும்போது அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள தர முத்திரைகளை பார்த்து வாங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதில் ஆசிரியர்கள், மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர். முன்னதாக குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ரவிக்குமார் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் ஞானசேகரன் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்