search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    நுகர்வோர் மன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    நுகர்வோர் மன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • பொருட்கள் வாங்கும்போது தர முத்திரைகளை பார்க்க வேண்டும்
    • குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில் விழா

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே பொம்மனப்பாடி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலை பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி உதவி தலைமை ஆசிரியை தமிழரசி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கதிரவன் கலந்துகொண்டு பேசுகையில், நுகர்வோர் பாதுகாப்பு, நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள், பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற செயல்பாடுகள் குறித்து விரிவாக பேசினார். மேலும் ஒவ்வொரு மாணவர்களும் நுகர்வோர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வினை முழுமையாக அடைந்து தனது பெற்றோரிடமும், அருகாமையில் இருப்பவரிடம் இதுபற்றி விளக்கமாக கூற வேண்டும் எனவும், கண்டிப்பாக பொருட்கள் வாங்கும் போது கவனித்து வாங்க வேண்டும், பொருட்கள் வாங்கும்போது அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள தர முத்திரைகளை பார்த்து வாங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதில் ஆசிரியர்கள், மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர். முன்னதாக குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ரவிக்குமார் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் ஞானசேகரன் நன்றி கூறினார்.

    Next Story
    ×