search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பட்டதாரி ஆசிரியர் கழக பரிசளிப்பு விழா
    X

    பட்டதாரி ஆசிரியர் கழக பரிசளிப்பு விழா

    • மாவட்ட இணை செயலாளர் நன்றி கூறினார்.
    • பட்டதாரி ஆசிரியர் கழக பரிசளிப்பு விழா நடைபெற்றது

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் பட்டதாரி - முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் 49 - ம் ஆண்டு பரிசளிப்பு விழா மற்றும் பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட தலைவர் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அருண்குமார், மாவட்ட பொருளாளர் இலக்கியசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக பூலாம்பாடி பிளஸ் மேக்ஸ் குரூப் ஆப் கம்பெனி நிர்வாக இயக்குனர் டத்தோ பிரகதீஸ்குமார் கலந்துகொண்டு, பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சி விழுக்காடு பெற்று தந்த ஆசிரியர்கள் மற்றும் 100 சதவீதம் தேர்ச்சி விழுக்காடு பெற்றுதந்த தலைமையாசிரியர்கள், 2022-2023 கல்வியாண்டில் ஓய்வு பெறும் ஆசிரியர்கள் ஆகியோர்களை பாராட்டி பரிசு வழங்கி பேசினார்.

    தொடர்ந்து மாநில சிறப்பு தலைவர் சுப்ரமணியன், மாநில தலைவர் மகேந்திரன், மாநில பொதுசெயலாளர் சுந்தரமூர்த்தி, மாநில பொருளாளர் துரைராஜ், கவுரவ தலைவர் பாபுவாணன், முன்னாள் மாநில துணை தலைவர் தங்கராஜ் ஆகியோர் பேசினர். இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக மகளிரணி செயலாளர் ஜெயந்தி வரவேற்றர். முடிவில் மாவட்ட இணை செயலாளர் லட்சுமணன் நன்றி கூறினார்.

    Next Story
    ×