என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வரத விகாஸ் பப்ளிக் பள்ளியில் ஸ்பேஸ் லேப் திறப்பு விழா
- மாணவர்களுடன் கலந்துரையாடல் நடந்தது
- வரத விகாஸ் பப்ளிக் பள்ளியில் ஸ்பேஸ் லேப் திறப்பு விழா நடந்தது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வரிசைப்பட்டி வரத விகாஸ் பப்ளிக் பள்ளியில் ஸ்பேஸ் லேப் திறப்பு விழா நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் எம்.என்.ராஜா தலைமை தாங்கினார். பள்ளி மாணவிகளின் வரவேற்பு நடனத்துடன் குத்துவிளக்கேற்றி விழா தொடங்கப்பட்டது. விழாவில் பள்ளியின் முதல்வர் செண்பகா தேவி வரவேற்புரை வழங்கினார்.சிறப்பு விருந்தினராக இஸ்ரோவில் இருந்த இந்திய விண்வெளி ஆராய்சியாளர் டி.கே.சுந்தரமூர்த்தி கலந்து கொண்டு ஸ்பேஸ் லேப்பினை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியது: மாணவர்கள் கல்வி கற்கும் போது சுதந்திரமாகவும், விருப்பத்தோடும் கற்க வேண்டும், ஒவ்வொரு மாணவர்களும் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்று வாழ்த்தினார்.
பின்னர் மாணவர்களுடன் கலந்துரையாடி மாணவர்கள் கேட்கும் பல்வேறு விதமான கேள்விகளுக்கு விடையளித்தார்.விழாவிற்கு வரதராஜன் கல்வி நிலையத்தின் அறக்கட்டளை குழுமத்தின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் நவாஸ் எடுடெக் அமைப்பிலிருந்து ரோகித், ரவிகிருஷ்ணா, மீனா ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் செய்திருந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்