search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சிறப்பு புகைப்படக்கண்காட்சி நிறைவு விழா
    X

    சிறப்பு புகைப்படக்கண்காட்சி நிறைவு விழா

    • சிறப்பு புகைப்படக்கண்காட்சி நிறைவு விழா நடந்தது
    • அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படங்கள்

    பெரம்பலூர்:

    மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் சார்பில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் மக்கள்நலத்திட்டங்கள் என்ற தலைப்பில் பெரம்பலூரில் 3 நாட்கள் நடைபெற்ற சிறப்பு புகைப்படக்கண்காட்சி நிறைவு விழா இன்று நடைபெற்றது. திருச்சி மத்திய மக்கள் தொடர்பக கள விளம்பர அலுவலர் தேவிபத்மநாபன், வக்கீல் காமராஜ் ஆகியோர் பேசினார். பின்னர் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. இக்கண்காட்சியில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது. மேலும் ஒருங்கிணைந்தகுழந்தைகள் வளர்ச்சித் திட்டம், இந்திய அஞ்சல் துறை, சித்தா, மாவட்ட சமூக நலத்துறை, தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம்,இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றின் சார்பில் அரங்கம் அமைக்கப்பட்டு திட்டங்கள், நல திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து நாட்டுப்புற இன்னிசை நிகழ்ச்சிகள் மூலம் அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த திரைப்படம் ஒளிப்பரப்பட்டது. இதில் இக்கண்காட்சியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பார்வையிட்டு பயனடைந்தனர். கள விளம்பர உதவியாளர் அருண்குமார் வரவேற்றார், முடிவில் கள விளம்பர உதவியாளர் ரவீந்திரன் நன்றி கூறினார்.

    Next Story
    ×