என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுங்கச்சாவடி ஊழியர்கள் கையில் தீச்சட்டி ஏந்தி போராட்டம்
    X

    சுங்கச்சாவடி ஊழியர்கள் கையில் தீச்சட்டி ஏந்தி போராட்டம்

    • சுங்கச்சாவடி ஊழியர்கள் கையில் தீச்சட்டி ஏந்தி போராட்டம் நடைபெற்றது
    • 46-வது நாளான தொடர்ந்து நடைபெற்றது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்த திருமாந்துறையில் உள்ள சுங்கச்சாவடியில் பணியாற்றிய ஊழியர்கள் 28 பேரை பணியிடை நீக்கம் செய்த தனியார் ஒப்பந்த நிர்வாகத்தை கண்டித்து கடந்த மாதம் 1-ந் தேதி முதல் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களது போராட்டத்திற்கு அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 46-வது நாளான நேற்றும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கையில் தீச்சட்டி ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்."

    Next Story
    ×