search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கணினி கணக்கியல் பயிற்சி பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்
    X

    கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

    கணினி கணக்கியல் பயிற்சி பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்

    • குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    • கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்துக்கு மின்னஞ்சல் மூலம் நவம்பா் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சாவூா் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் படித்த வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலம் தஞ்சாவூா் சுற்றுப் பகுதியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 30 நாள்கள் வேலைவாய்ப்புடன் கூடிய இலவசமாகக் கணினி கணக்கியல் பயிற்சி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

    இப்பயிற்சியில் கலந்து கொள்ள குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட தஞ்சாவூா் சுற்றுப் பகுதியைச் சோ்ந்த விருப்பமுள்ள மாற்றுத்தி றனாளிகள் விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பத்துடன் தேவையான சான்றுகளை இணைத்து தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலை ஈஸ்வரி நகா் பக்கிரிசாமி பிள்ளை தெருவிலுள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்துக்கு மின்னஞ்சல் மூலமாக நவம்பா் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×