search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொங்கல்  விளையாட்டு போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் திருமாவளவன்
    X

    பொங்கல் விளையாட்டு போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் திருமாவளவன்

    • 300க்கும் மேற்பட்ட பொது மக்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர்.
    • திருமாவளவன் விழா மேடையில் கேக் வெட்டி தனது 60வது பிறந்தநாளை கட்சி தொண்டர்களுடன் கொண்டாடினார்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் உள்ள மல்லை கலங்கரை விளக்கு மக்கள் சேவை மையமும், விடுதலை சிறுத்தை கட்சியினரும் இணைந்து 15வது முறையாக பொங்கல் விழா விளையாட்டு போட்டிகள் நடத்தினர்.

    இதில் ஆண்கள், பெண்கள் என 300க்கும் மேற்பட்ட பொது மக்கள் பங்கேற்று, கோலம் போடுதல், கயிறு இழுத்தல், இசை நாற்காலி, சிலம்பம், கைப்பந்து, ஸ்லோ சைக்கிள், மியூசிக் சேர், கபடி, உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர்.

    இதில் வெற்றி பெற்ற அனைவருக்கும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் பரிசுகள் வழங்கினார்.

    பின்னர் அதே மேடையில் கேக் வெட்டி, தனது 60வது பிறந்தநாளை கட்சி தொண்டர்களுடன் கொண்டாடினார்.

    ம.தி.மு.க துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில தொண்டரணி செயலாளர் கிட்டு, திருக்கழுக்குன்றம் ஒன்றிய செயலாளர் இ.சி.ஆர் அன்பு, நகர செயலாளர் ஐயப்பன், சாலமன், சிவா, பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×