என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசு
- போட்டியானது கும்பகோணம் உச்சி பிள்ளையார் கோவிலில் இருந்து தொடங்கியது.
- போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
சுவாமிமலை:
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கும்பகோணம் உட்கோட்ட காவல்துறை சார்பில் 10 முதல் 25 வயது வரை உள்ள பெண்களுக் கான மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது.
போட்டியை கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
போட்டியானது உச்சி பிள்ளையார் கோவில் அருகில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வந்து நிறைவடைந்தது.
போட்டியில் முதல் 2 இடங்களை மயிலாடு துறையை சேர்ந்த பெண்களும், 3-ம் இடத்தை கும்பகோணத்தை சேர்ந்த பெண்ணும் பிடித்தனர்.
அவர்களுக்கு கோப்பை, சான்றிதழ்களை கும்பகோணம் ரெட்கிராஸ் துணை சேர்மன் ரொசாரியோ முன்னிலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் வழங்கினார்.
மேலும், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியை கும்பகோணம் போக்கு வரத்து இன்ஸ்பெக்டர் சரவணகுமார் ஒருங்கிணைத் ்தார்.
இதில் ரெட்கிராஸ் நிர்வாகிகள் கணேசன், சிவக்குமார், ராமதாஸ், சபாபதி மற்றும் போலீசார், போக்குவரத்து போலீசார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்