search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வினாடி- வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு
    X

    வெற்றி பெற்ற மாணவிகளுக்கு நகர்மன்ற தலைவர் புகழேந்தி பரிசு வழங்கினார்.

    வினாடி- வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு

    • வாய்மேடு வரையிலான பஸ் வழித்தடத்தில் மகளிர் நலன் கருதி இலவச பஸ் இயக்க வேண்டும்.
    • மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணத்தை அரசு உடனே வழங்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வட்ட நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு சார்பில் தேசிய நுகர்வோர் தினவிழா வேதாரண்யத்தில் நடைபெற்றது. விழாவிற்கு நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு தலைவர் வீரசுந்தரம் தலைமை தாங்கினார்.

    துணை தலைவர் சாமிநாதன் கந்தசாமி, அமைப்பு செயலாளர் வைரக்கண்ணு, செயற்குழு உறுப்பினர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இணை செயலாளர் சுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் வேதாரண்யம் தாசில்தார் ஜெயசீலன், வட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார், உணவு பாதுகாப்பு அலுவலர் மணவழகன், வட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு செயலாளர் செல்வராஜ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். வேதாரண்யம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி நுகர்வோர் வினாடி- வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.

    கூட்டத்தில் வேதாரண்யத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது, வேதாரண்யம், ஆயக்காரன்புலம், வாய்மேடு வரையிலான பஸ் வழித்தடத்தில் மகளிர் நலன் கருதி இலவச பஸ் இயக்க வேண்டும்.

    மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணத்தை அரசு உடனே வழங்க வேண்டும்.

    மானங்கொண்டான் ஆற்றில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முடிவில் பொருளாளர் மாரிமுத்து நன்றி கூறினார்.

    Next Story
    ×