என் மலர்
உள்ளூர் செய்திகள்

மிதிவண்டிகளை ஒன்றியக்குழு தலைவர் அரசாபகரன் வழங்கினார்.
மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்
- தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின்–படி நேற்று மாணவர்–களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.
- 402 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.
திருவையாறு:
திருவையாறு சீனிவா சராவ் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின்–படி நேற்று மாலை மாணவர்–களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பள்ளிச் செயலர் ரஞ்சன் கோபால் முன்னிலையில் தலைமையாசிரியர் அனந்தராமன் தலைமையில் திருவையாறு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் அரசாபகரன் விலையில்லா மிதிவண்டிகளை மாணவ, மாண விகளுக்கு வழங்கினார்.
402 பேருக்கு விலை யில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் திருவையாறு பேரூராட்சி 10 வது வார்டு உறுப்பினர் சசிகலா குமணன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தண்டபாணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Next Story






