search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள், வியாபாரிகள் அச்சம்
    X

    குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள், வியாபாரிகள் அச்சம்

    • பொன்னேரி பகுதிகளில் குரங்குகள் செய்யும் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • வீடுகளில் புகுந்தும் பொருட்களை எடுத்துச் செல்கிறது.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த வேண்பாக்கம், திருவாயர்பாடி, வேம்பட்டு, காந்திநகர், மெதுர், பொன்னேரி ரெயில் நிலையம், பொன்னேரி தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட குரங்குகள், தங்களின் குட்டிகளுடன் அட்டகாசம் செய்து வருகின்றன.

    பஜாரில் உள்ள கடைகளின் உள்ளே புகுந்து தின்பண்டங்களை எடுத்துக் கொண்டும், பழக்கடைகளில் பழங்களை எடுத்துக் கொண்டும் செல்கின்றன. அந்த குரங்குகளை பொதுமக்கள் விரட்டினால் அவை அவர்களை கடிக்க வருகின்றன. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    மேலும் சிறுவர்கள் கையில் வைத்துள்ள தின்பண்டங்களையும் குரங்குகள் பறித்து கொண்டு செல்கின்றன. இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியு உள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 'பொன்னேரி பகுதிகளில் குரங்குகள் செய்யும் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைகளில் தின்பண்டங்களை தொங்கவிட முடிவதில்லை. வீடுகளில் புகுந்தும் பொருட்களை எடுத்துச் செல்கிறது. எனவே வனத்துறையினர் கூண்டு வைத்து குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட வேண்டும்' என்றனர்.

    Next Story
    ×