என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்கம்பங்களை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்
    X

    மின்கம்பங்களை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்

    • மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
    • 30 பேரையும் கைது செய்து தனியாா் திருமண மண்ட பத்தில் தங்கவைத்தனா்.

    அனுப்பர்பாளையம் :

    திருப்பூா் வடக்கு வட்டம் பொங்குபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட பள்ளிபாளையம் அண்ணா நகா் பகுதியில் 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு இடையூறாக 2 மின் கம்பங்கள் உள்ளன. இந்த மின்கம்பங்களை அகற்றக் கோரி அப்பகுதி பொதுமக்கள் சாா்பில் மாவட்ட கலெக்டர், சப்-கலெக்டர் உள்ளிட்டோரிடம் மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

    இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் உரிய தீா்வு கிடைக்கும் வகையில் திருமுருகன்பூண்டியில் உள்ள உதவி மின் பொறியாளா் அலுவலகம் முன்பாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். இது குறித்து தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த திருமுருகன்பூண்டி காவல் துறையினா் போராட்டத்தில் ஈடுபட முயன்றவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.ஆனால் அவா்கள் கலைந்து செல்ல மறுத்ததால் 30 பேரையும் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனா்.

    இதுதொா்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், குடியிருப்புகளுக்கு இடையூறாக உள்ள இரு மின் கம்பங்களால் மழைக் காலங்களில் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. ஆகவே, இந்த கம்பங்களை மாற்றிக் கொடுக்கும் வரையில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தனா்.

    Next Story
    ×