search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பனை மரங்கள் ஏற்றி சென்ற லாரி சிறை பிடிப்பு
    X

    பனை மரங்கள் ஏற்றி சென்ற லாரி சிறை பிடிப்பு

    • பனை மரங்கள் ஏற்றி சென்ற லாரிலை போலீசார் சிறை பிடித்தனர்
    • அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பான சூழல் நிலவியது.

    ஆலங்குடி :புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குளமங்கலம், பனங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் மர்ம நபர்கள் சிலர் அரசு இடங்கள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள பனை மரங்களை வெட்டி விற்பனை செய்து வருவதாக கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோரிடம் முறையிட்டு உள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு பனை மரங்களை வெட்டி லாரியில் மரங்களை ஏற்றிக் கொண்டு பனங்குளம் பாலம் பகுதியில் வந்தபோது அங்கு திரண்ட நாம் தமிழர் கட்சியினர் அந்த வாகனத்தை சிறைப்பிடித்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த குளமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த கீரமங்கலம் காவல் துறையினர் மரங்களை ஏற்றி வந்த வாகனத்தை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். இந்த சம்பவத்தின் காரணமாக அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பான சூழல் நிலவியது.

    Next Story
    ×