என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு போட்டி பரிசு வழங்கும் விழா
- விழிப்புணர்வு போட்டி பரிசு வழங்கும் விழா நடந்தது.
- கிராம நிர்வாக அலுவலர் வழங்கினார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் வெள்ளூர் நடுநிலைப் பள்ளியில் பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர் பயிற்சி வெள்ளூர் கிராம நிர்வாக அலுவலர் முனியப்பனால் வழங்கப்பட்டது. விழிப்புணர்வு நிகழ்ச்சியின் தொடர்ந்து மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது. நிகழ்ச்சியில் மணமேல்குடி வருவாய் ஆய்வாளர் ராஜா கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி பாராட்டுரை நிகழ்த்தினார். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். 10 மாணவர்கள் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
Next Story






