search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    டிராக்டரிலிருந்து விழுந்த சிறுவனுக்கு காயம்
    X

    டிராக்டரிலிருந்து விழுந்த சிறுவனுக்கு காயம்

    • டிராக்டரிலிருந்து விழுந்த சிறுவனுக்கு காயம் ஏற்பட்டது
    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

    புதுக்கோட்டை

    ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட காத்தான் விடுதியை சேர்ந்தவர் குமார். இவர் தனது டிராக்டர் மூலம் மாங்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட வல்லக்குளம் பகுதியில் உழவு பணி செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த வீரையா மகன் தயாநிதி (வயது14) என்ற சிறுவன் டிராக்டரில் ஏறி அமர்ந்துள்ளார். அப்போது, டிராக்டரில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில், டிராக்டரின் கலப்பையில் சிக்கி தயாநிதியின் வலது கால் முறிந்தது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தயாநிதியை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×