என் மலர்
உள்ளூர் செய்திகள்

1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
- 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
- கார் உரிமையாளர் மேல்நிலைபட்டி சுப்பையா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் வடக்கு நல்லிபட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விபத்துக்குள்ளான காரை சோதனை செய்த போது சுமார் 1000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. மேலும் அந்த காரை ஓட்டி வந்தது புதுக்கோட்டை அசோக் நகரை சேர்ந்த அக்பர் அலி மகன் சேக் தாவூத் (வயது 24) என்பதும், ரேஷன் அரிசியை கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து டிரைவர் சேக்தாவூத்தை கைது செய்து, 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். கார் உரிமையாளர் மேல்நிலைபட்டி சுப்பையா என்பவரையும் தேடி வருகின்றனர்.
Next Story






