search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய துணை சுகாதார நிலையம் திறப்பு
    X

    புதிய துணை சுகாதார நிலையம் திறப்பு

    • புதிய துணை சுகாதார நிலையம் திறக்கப்பட்டது
    • மருதங்கோண் விடுதியில் கட்டி முடிக்கப்பட்ட

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களை திறந்து வைத்தார். அந்த வகையில் மறமடக்கியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மருதங்கோண்விடுதயில் கட்டி முடிக்கப்பட்டு இருந்த துணை சுகாதார நிலையத்தை அங்கிருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்து சுகாதார நிலையத்தின் சாவினை மருத்துவரிடம் வழங்கினார்.

    மருதங்கோண் விடுதியில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பெருந்தலைவர் மாலாராஜேந்திரதுரை கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றினார். நிகழ்ச்சியில் பாப்பாபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர் கார்த்திகா, ஹெல்த் இன்ஸ்பெக்டர் குணசேகரன், சிங்காரவேலு, ஊராட்சி மன்ற தலைவர் நிலோபர் நிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் விஜயா பூபதி, ஒன்றிய கவுன்சிலர்கள் திருநாவுக்கரசு, ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தெட்சிணாமூர்த்தி, ரஞ்சனி , அன்பழகன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் சாகுல் ஹமீது, நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் அரங்கதங்கமணி நன்றி கூறினார்.

    Next Story
    ×