என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மாணவ, மாணவிகளுக்கு கலை நிகழ்ச்சி ேபாட்டிகள்
- மாணவ, மாணவியர்களுக்கான கலை நிகழ்ச்சி ேபாட்டிகள் நடைபெற்றன.
- உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மீமிசலில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாணவ மாணவியர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. மீமிசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், வட்டார மேற்பார்வையாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெகதீசன் முன்னிலை வகித்தார்.விழாவில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளோடு சக மாணவர்கள் இணைந்து நடனம், பாட்டு, கவிதைகள் வாசிப்பது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவில் ஒன்றியக்குழு உறுப்பினர் ரமேஷ், ரோட்டரி சங்க நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக விழாவை முன்னிட்டு மாணவ, மாணவியர்களுக்கான நடைபெற்ற ஓட்டப்பந்தயம், பாட்டிலில் நீர் நிரப்புதல், முறுக்கு கடித்தல், இசை நாற்காலி, பந்து தூக்கி எறிதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள், நினைவுக்கேடயம், பரிசுகள் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர் சிறப்பு பயிற்றுனர்கள், இயன்முறை மருத்துவர் ஆகியோர் செய்திருந்தனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் குணசீலன் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்