என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலங்குடி அருகே லோடு வேனில் 1 டன் ரேஷன் அரிசி கடத்தல்
- ஆலங்குடி அருகே லோடு வேனில் 1 டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது
- ஒருவர் கைது, டிரைவர் தப்பி ஓட்டம்
ஆலங்குடி,
ஆலங்குடி அருகே லோடு வேனில் ரேஷன் அரிசி கடத்திய வரை குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் கைது செய்து ரேஷன் அரிசி மற்றும் அதனை கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்தனர். புதுகோட்டை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார், மாந்தங்குடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த லோடு வேனை நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த வண்டியில் 1 டன் ரேசன் அரிசி கடத்தப்படுவது தெரிய வந்தது. லோடு வாகனத்தில், வந்த அதன் உரிமையாளர் செம்பட்டிவிடுதியை சேர்ந்த தொப்புளான் மகன் ரெகுநாதன் என்பவர் அரிசியை கடத்தி செல்வது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து ரெகுநாதனை கைது செய்த, புதுக்கோட்டை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலிசார், அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் தப்பியோடிய லோடு வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.
Next Story






