என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காலாண்டு விடுமுறை இன்றுடன் நிறைவு
- 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கான காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வுகள் கடந்த மாதம் நடந்தது.
- 9 நாட்கள் விடுமுறைக்கு பிறகு 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட்டன.
சேலம்:
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் (2022-2023) 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கான காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வுகள் கடந்த மாதம் நடந்தது. தேர்வு முடிந்து 1-ந்தேதி முதல் விடுமுறை விடப்பட்டது.
இதில் 9 நாட்கள் விடுமுறைக்கு பிறகு 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட்டன.
பயிற்சி
ஆனால், அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் 2-ம் கட்ட பயிற்சி காரணமாக 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு 1-ந்தேதி முதல் இன்று வரை விடுமுறை அளிக்கப்பட்டது.
விடுமுறை நாட்களில் அரசு ெதாடக்கப்பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளுக்கு எண்ணும் எழுத்தும் 2-ம் கட்ட பயிற்சி நடந்தது. . இதில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 2000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியைகள் பங்கேற்றனர்.
நாளை பள்ளிகள் திறப்பு
இந்த பயிற்சி நிறைவடைந்ததை அடுத்து 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான அரசு, அரசு பெறும் தொடக்கப் பள்ளிகள் 12 நாட்கள் விடுமுறைக்கு பிறகு நாளை (13-ந் தேதி) திறக்கப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்